ஜீரா பூரி

தேவையான பொருட்கள்
  1. மைதா - 1/2 கிலோ
  2. சீனி - 3 கப்
  3. முந்திரி - 25
  4. ஏலக்காய் பொடி-3 சிட்டிகை
  5. கேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி
  6. சோடா உப்பு - 1 சிட்டிகை
  7. உப்பு - 1/2 தேக்கரண்டி
  8. எண்ணெய் - 2  கப்
செய்முறை
                • மைதாமாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 
                • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் கேசரி பவுடரை கலந்துக் கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் சலித்த மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் கலர் கலந்து வைத்திருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். பிசையும் போது நன்கு  மிருதுவாகும் வரை பிசைந்துக் கொள்ளவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொள்ளவும்.
                • பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாதியாக தேய்க்கவும். அதை அப்படியே சுருட்டி கத்தியால் மூன்று பாகங்களாக நறுக்கவும்.
                • நறுக்கிய துண்டுகளை எடுத்து செங்குத்தாக வைத்து அழுத்தி சப்பாத்தி கட்டையில் வைத்து அதிகம் அழுத்தி தேய்க்காமல் வட்டமாக தேய்த்து சிறிய பூரிகளாக செய்து வைத்துக் கொள்ளவும்..
                • ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றினால் பாகு வாசனையாக இருக்கும். பாகுடன் பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்துக் கொள்ளவும்
                • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு இருப்புறமும் வேகவிட்டு சிவக்க விடாமல் எடுக்கவும்.
                • பிறகு பொரித்த எடுத்த பூரிகளை செய்து வைத்திருக்கும் ஜீராவில் 3 நிமிடம் போட்டு வைக்கவும்.
                • பூரியில் ஜீரா நன்கு ஊறியதும் 10 நிமிடம் கழித்து,  தட்டில் எடுத்து வைத்து ஒவ்வொரு பூரியின் மேலேயும் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும். சுவையான ஜீரா பூரி தயார்.

                Related Posts with Thumbnails