தேவையான பொருட்கள்
- மைதா மாவு - ஒரு கப்
- ரவா - அரை கப்
- சீனி - அரை கப்
- ஆயில் - கால் கப்
- ஏலக்காய் - 6
- முந்திரி - 12
- கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
- உப்பு - அரை தேக்கரண்டி
- நெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை
- மைதா மாவுடன் உப்பு, கலர் பவுடர், ஒன்றரை மேசைக்கரண்டி ஆயில் கப் தண்ணீர் சேர்த்து பூரிமாவை விட சற்று தளர்வாக பிசைந்து 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
- மிக்ஸியில் முந்திரியையும், ஏலக்காயையும் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் தீயை குறைத்து, அதில் கேசரி பவுடர், ரவை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- திரண்டு வரும் போது நெய் மற்றும் அரைத்த முந்திரியை போட்டு 1 நிமிடம் கிளறி விடவும்.
- அதன் பின்னர் சீனியை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் மூடி வைத்திருக்கவும். பிறகு திறந்து அடிப்பிடிக்காமல் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
- ஆறியதும் சிறிய எலுமிச்சை பழ உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதைப் போலவே பிசைந்த மைதா மாவையும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- மைதா மாவு உருண்டையை கையால் சிறிய அளவிற்கு வட்டமாக தட்டி அதில் கேசரி உருண்டையை நடுவில் வைத்து மூடி விட்டு உருட்டி கொள்ளவும்.
- பிறகு அந்த உருண்டையை கையால் தட்டி கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து இலையில் தட்டி வைத்த போளியை போட்டு சுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து விடவும்.