தேவையான பொருட்கள்
- பச்சரிசி -- 1 கப்
- புழுங்கரிசி -- 1/2 கப்
- உளுந்து -- 1/4 கப்
- வெந்தயம் -- 1 ஸ்பூன்
- தேங்காய் -- 1 மூடி
- அரிசி, தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- உளுந்து, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் ஊற வைத்ததை அரைக்கும் போது தேங்காயை சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
- இரவு அரைத்தால் காலையில் சுடுவதற்கு தயாராக இருக்கும்.
- காலையில் மாவு புளித்த பின் தோசையாக வார்க்கலாம்.
- இது ஒரு வெரைட்டியாக இருக்கும்.