தேவையான அளவு
- அரிசி - 1 கப்
- பால் - 1 கப்
- தயிர் - 1 கப்
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1 துண்டு
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காய தூள் -1 தேக்கரண்டி
- எண்ணெய் - சிறிது
செய்முறை
- குக்கரில் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரிசி சேர்த்து சற்று குழைவாக வேகவைத்து கொள்ளவும்.
- பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
- சூடான சாதத்தில் பாலை ஊற்றி நன்றாகப் கலந்து கொள்ளவும்
- அதில் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- பிறகு உப்பையும், சேர்த்து கிண்டிகொள்ளவும்
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, போட்டுத் தாளித்து இஞ்சி, பச்சைமிளகாய்களை பெருங்காய தூள் போட்டு வறுத்து சாதத்தில் போடவும்.
- பிறகு கலந்து பரிமாறவும்