தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- எலுமிச்சம்பழம் சாறு - 6 மேஜைகரண்டி
- மஞ்சள்தூள் - 1 /4 மேஜைகரண்டி
- காய்ந்த மிளகாய் - 3
- கடுகு - 1 மேஜைகரண்டி
- உளுத்தம்பருப்பு - 2 மேஜைகரண்டி
- கடலைப்பருப்பு - 2 மேஜைகரண்டி
- பெருங்காய தூள் - 1 மேஜைகரண்டி
- கொத்தமல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 2 கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- சாதத்தை குழைய விடாமல் வேக வைத்து எடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போட்டு பொரிக்க வேண்டும்.
- பிறகு மிளகாய்களைப் போட்டு, பிறகு பெருங்காயத்தையும் மஞ்சள்தூளையும் உப்பு எலுமிச்சை சாற்றினை போட்டு கிளறி ஆற வைத்த சாதத்தை கிண்டி கொள்ளவும்
- இறுதியில் சிறிது கொத்தமல்லித் தழையை தூவி விடவும்.